பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.
1.அல் கிதாப் – வேதநூல்
2.அல் பயான் – தெளிவுரை
3.அல் புர்ஃகான் – நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது
4.அல் புர்ஹான் – தெளிவான அத்தாட்சி
5.அத் திக்ரு – நினைவுறுத்துவது
6அந் நூர் – ஒளி
7.அல் ஹக்கு – சத்தியமானது
8.அல் கரீம் – கண்ணியத்திற்குறியது
9.அல் முபீன் – தெளிவுபடுத்தக்கூடியது
10.அல் ஹகீம் – ஞானம் நிறைந்தது
11.அல் அஜீஸ் – மதிப்பிற்குறியது
12.அல் ஹுதா – நேர்வழி
13.அர் ரஹ்மத் – அருள்
14.அஷ் ஷிபா – நிவாரணமளிப்பது
15.அல் மவ்இளத் – நல்லுபதேசம்
16.அல் ஹிக்மத் – ஞானம்
17.அல் முஹைமின் – பாதுகாவலாக இருப்பது
18.அல் கய்யிம் – உறுதியானது
19.அந் நிஃமத் – அருட்கொடை
20.அர் ரூஹ் – உயிருள்ளது
21.அத் தன்ஜீல் – இறக்கிவைக்கப்பட்டது
22.அல் ஹுக்மு – சட்டம்
23.அல் முபாரக் – புனிதமாக்கப்பட்டது
24.அல் முஸத்திக் – உண்மையாக்கி வைக்கக்கூடியது
25.அல் பஷீர் – நற்செய்தி கூறுவது
26.அந் நதீர் – அச்சுறுத்தி எச்சரிப்பது.
27.அல் முதஹ்ஹரா – பரிசுத்தமாக்கப்பட்டது
28.அல் முகர்ரமா – சங்கைக்குறியது
29.அல் மஜீத் – மேன்மைக்குறியது
30.அல் அரபிய்யு – அரபி மொழியுடையது
31.அல் மர்ஃபூஆ – உயர்வானது
32.அல் அஜப் – ஆச்சரியமானது
33.அல் பஸாயிர் – ஆதாரமுள்ளது
34.அத் திக்ரா – நினவூட்டும் உபதேசம்
35.ஹப்லுல்லாஹ் – அல்லாஹ்வின் கயிறு