இறைத்தூதரும் குழந்தைகளும்

7869

[ ”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.]

குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார்கள். கைக்குழந்தைகளை உலுக்குவதையோ மேலெறிந்து பிடிப்பதையோ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. சற்று வளர்ந்த குழந்தைகளுடன்தான் அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளையாடினார்கள். கைக்குழந்தைகளின் கழுத்து மென்மையானதால் மூளை பாதிப்படையவோ அல்லது மரண மேற்படவோ வாய்ப்புண்டு.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையின் அழுகைக்கு பதிலளித்துள்ளார்கள். ஒரு முறை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அத்தொழுகையை அவசரமாக தொழுது முடித்தார்கள். நபித்தோழர்கள் காரணம் கேட்க, ”பின்னால் தொழுது கொண்டிருக்கும் தாயின் மனம் பதைபதைக்கும் அல்லவா?” என்றார்கள். உணவு தேவைப்படும் போதும் சௌகரியமாக இருக்க விரும்பும் போதும் சௌகரியமாக தொடுகை தேவைப்படும் போதும் குழந்தைகள் அழுகையின் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

குழந்தைகளுக்கு தேவையான நாளாந்த காரியங்களை ஒழுங்காகச் செய்வதிலும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதிலும் தானும் ஈடுபட்டு ஏனைய தோழர்களையும் ஊக்குவித்தார்கள். குழந்தைகள் தன்னை நம்புவதற்கும் ஊக்குவித்தார்கள். அதற்காக தனது அன்பையும் அரவணைப்பையும் காட்டினார்கள். குழந்தைகளை அரவணைத்து உரையாடுவதிலும் நகைச்சுவையாக பேசுவதிலும் ஆர்வம் காட்டினார்கள். குழந்தை ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாமல் விரக்தியடையும் போது வித்தியாசமான அணுகுமுறையைப் பயன்படுத்தி தீர்த்துள்ளார்கள். பெருநாள் தினத்தில் ஒரு குழந்தை கவலையுற்றிருந்ததைக் கண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வேண்டிய உபசரணைகளை செய்தார்கள்.

அதேபோல் குழந்தைகள் ஆபத்தான காரியம் ஒன்றைச் செய்யும் போது உடனடியாகச் அச்செய்கையிலிருந்து குழந்தையை விடுவித்து பின்னர் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியுமுள்ளார்கள். வீதியில் கல்லெறிந்து விளையாடுவதை தடுத்த சம்பவத்தைக் கூறலாம். அதற்குப் பகரமாக சதுரங்க விளையாட்டை அனுமதித்ததை காண முடிகிறது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் வாள், சுவனத்தின் தலைவர்கள், தாவூதின் புல்லாங்குழல் என்றும் குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அடிக்கடி கூறுவார்கள். குழந்தைகளுக்கென்று தனியாக நேரம் ஒதுக்கியும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பழகியுள்ளார். ஹஸன், ஹுஸைன், உஸாமா, அனஸ் போன்ற குழந்தைகள் பிறகாலத்தில் வளர்ந்து பெரியவர்களான பின்பும் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடன் கழித்த அந்த இனிமையான பொழுதுகளை நினைவு படுத்தி கூறியுள்ளார்கள்.

அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளார்கள். பரிசு வழங்குவது பாசத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்கள். தொடுகை, ஸ்பரிசம் என்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். தலையை தடவுதல், மடியில் வைத்திருத்தல், அணைத்து பிடித்தல், முத்தமிடல், வருடுதல், குழந்தைகளும் தானும் பெரிய துணியால் போர்த்திக் கொண்டு கதகதப்பாக இருத்தல் போன்ற உடலின் தொடுகையால் வரும் பல அன்பு மொழிகளை வெளிப்படத்தியுள்ளார்கள் இவற்றுக்கான சம்பவங்களை சற்று நோக்குவோம்.

ஒருநாள் காலித் பின் ஸயீத் என்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்க வந்தார். அருடைய பெண் குழந்தையும் அவருடன் வந்த்து. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்குழந்தை நபிகளாரின் முதுகின் மேல்பக்கத்தில் முத்திரை போன்று தசை வளர்ந்திருப்பதை கண்டது. உடனே குழந்தை அதைத்தொட்டு விளையாட ஆரம்பித்த்து. புதிய பொருட்களைக் கண்டால் குழந்தைகளது பார்வை அவற்றில் செல்வது இயற்கையல்லவா?

இதைக் கண்டதும் காலித்துக்கு கோபம் வந்தது. நபிகளுடன் விளையாடுகிறாயா? என்று குழந்தையை தடுத்தார். ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ”குழந்தை விளையாடட்டும் அதைத் தடுக்க வேண்டாம்” என்றார்கள்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் குழந்தைகளை நேசித்து வந்தார். குழந்தைகளைக் கண்டால் ஸலாம் சொல்லுவார். வெளியூருக்குச் சென்று திரும்பி வநதால் தெருக்களில் வரும் குழந்தைகளைத் தமது ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொள்வார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பழங்கள் அன்பளிப்பாக கிடைத்தால் அவற்றை முதலில் குழந்தைகளுக்கே கொடுப்பார். போரில் குழந்தைகள் கொல்லப்பட்டதாக கேள்விப்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கவலைப்படுவார். ஒருமுறை ஒரு நபித்தோழர் ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல” என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.

”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

விளையாட்டாகவும் பொய் சொல்லாதே

”மகனே இங்கே வா உனக்கு ஒரு சாமான் தருகிறேன்” என்றாள் அந்தத்தாய். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தார்கள்.

”உன் குழந்தைக்கு எந்தப் பொருளைக் கொடுக்க நினைத்தாய்?” என் கேட்டார்கள்.

”நாயகமே பேரீச்சம் பழம் கொடுக்கப்போகிறேன்” என்றாள் அந்த தாய்.

”நீ உன் குழந்தைக்கு எதுவும் கொடுக்கவில்லையானால் நீ பொய் சொன்னதாக இறைவனிடம் எழுதப்படும். விளையாட்டாக கூட பொய் சொல்லக்கூடாது” என்றார்கள் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மற்றொரு நாள் ஒரு நபித்தோழர் வந்து சுவனம் செல்வதற்கு நான் என்ன நற்செயல் செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்கு நபிகள் ‘உண்மை’ என்று பதிலளித்தார்கள். ஏனெனில் உண்மை பேசும் மனிதன் எப்போதும் நல்ல காரியத்தையே செயகிறான் அவனிடம் இறை விசுவாசம் ஒளி வீசுகின்றது. நல்ல விசுவாசமுள்ளவன் நிச்சயமாக சுவனத்தில் பிரவேசிக்கிறான் என்பதை அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தோழருக்கு விளக்கினார்கள்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையாக இருக்கும் போது ஹலீமா என்னும் கிராமத்துப் பெண் அவருக்குப் பால் கொடுத்து வளர்த்தார்கள். நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வளர்ந்து நபிப்பட்டம் பெற்றார்கள். பல ஆண்டுகள் சென்றன. முஸ்லிம்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த போரில் ஹலீமாவின் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்களும் முஸ்லிம்களிடம் கைதிகளாக பிடிபட்டனர்.

ஒருநாள் ஒருபெண் புழுதி படிந்த ஆடையுடன் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேராக வந்து ”முஹம்மத் என்ன காரியம் செய்து விட்டீர்? உம்முடைய சிற்றன்னையுள்ள கோத்திரத்தை கைதியாக்கி வீட்டீரே!” என்றாள். அங்கிருந்தவர்கள் அந்தப்பெண் திடீரென நுழைந்ததையும் துணிச்சலாகப் பேசியதையும் கண்டு வியப்படைந்தார்கள்.

ஆனால் அவ்வாறு வந்த பெண் தனது செவிலித்தாய் என்றறிந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து அந்த அம்மையாரை அன்புடன் வரவேற்று தனது விரிப்பை விரித்து அதன் மீது உட்காரும்படி கூறினார். இனிமையாகப் பேசி, அநத அம்மையாரை மகிழ்வித்தார்கள். ஹலீமாவின் வேண்டுகோளுகிணங்கி எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தார்.

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குப் பால் கொடுத்து வளர்த்த தாய்க்கு இவ்வாறுதான் நன்றி செலுத்தினார்கள். இவ்வாறு தனக்கு உதவி செய்த ஒவ்வொருவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி நன்றி செலுத்தியுள்ளார்கள். மற்றொரு நாள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருக்கும் போது அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு தமது விரிப்பின் மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். சில நிமிடங்களில் செவிலித்தாய் ஹலீமா வநதார். உடனே விரிப்பின் இன்னொரு மூலையில் உட்காருவதற்கு இடமளித்தார்கள். இன்னும் சில வினாடிகளில் ஹலீமாவின் புதல்வி வந்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று அந்த விரிப்பில் மிகுதியாக இருந்த இடத்தில் தனது பால்குடிச் சகோதரியை உட்கார வைத்தார்கள்.

அன்று நோன்புப் பெருநாள். அதிகாலையிலிருந்தே பெருநாள் களைகட்டத் தொடங்கியிருந்தது பெருநாளைக் கொண்டாடுவதற்காக ஆயத்தங்களை எல்லோரும் சுறு சுறுப்புடன் செய்து கொண்டிருந்தார்கள். பெருநாள் தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. புத்தாடை அணிந்து பெரியவர்களும் குழந்தைகளும் தொழுகைக்காக மைதானத்தை நோக்கி நடக்கலானார்கள். சற்று நேரத்தில் தொழுகை முடிந்த்தும் குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வை அஙகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் பக்கமாக சென்றது. அவன் மெலிந்திருந்தான். அழுக்கடைந்த ஆடையை அணிந்திருந்தான். மைதானத்தில் ஒரு மூலையையில் அமர்ந்து மௌனமாக அழுது கொண்டிருந்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுவனை நோக்கி நடந்தார்கள் அவனுடைய தோளில் கைவைத்து அவனது தலையைத் தன்பக்கம் திருப்பினார். மகனே ஏன் அழுகிறாய் என்று அன்பாக கேட்டார். அந்தக் குழந்தை கோபத்துடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையைத் தட்டி விட்டது. என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய தலையைத் தடவிக் கொண்டு ”மகனே என்ன நடந்த்து?” என்று கேட்டார்கள். அவன் தனது முழங்கால்களுக்கிடையில் முகத்தைப்புதைத்துக் கொண்டு முஹம்மது நபிக்கு எதிராக நடந்த போரில் எனது தநதை மரணித்து விட்டார். என்னுடைய தாயார் வேறு ஒருவரை திருமனம் செய்து கொண்டார். என்னுடைய உடைகளையும் அபகரித்துக் கொண்டார். நான் தாயாரிடம் போனேன். அவருடைய புதிய கணவர் என்னைத் துரத்திவிட்டார். நான் என்ன செய்வேன் என்று ஓவென்று அழ ஆரம்பித்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அழுகை வந்தது. அதை அடக்கிக் கொண்டு ”அதுக்கென்ன நானும் ஓர் அநாதைதான் பிறப்பதற்கு முன்பே வாப்பாவை இழந்து விட்டேன்” என்று கூறினார்கள். சிறுவன் நபிகளை நிமிர்ந்து பார்த்த்தான். அவனுக்கு யார் என்பது நினைவுக்கு வந்தது. அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நான் உனக்கு தந்தை, ஆயிஷா உன் தாய், ஃபாத்திமா உன் சகோதரி என்று இருந்தால் சந்தோசப்படுவாயா?” என்று கேட்டார்.

சிறுவன் ஆம் என்றான். அச்சிறுவனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அழைத்து ”இதோ உனக்கு ஒரு மகன்” என்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அச்சிறுவனை அழைத்துச் சென்று குளிப்பாட்டினார். பின்னர் அவனுக்கு ஆடை அணிவித்தார்கள். அவனுக்கு உண்ண உணவு கொடுத்தார்கள். இப்போது வெளியே சென்று குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வா என்றார்கள். அவன் ஆனந்தத்துடன் வெளியேறி மைதானத்தை நோக்கி ஓடினான். எல்லா மனிதர்களுக்கும் முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட அகிலத்தின் அருட்கொடை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியைப்பின்பற்றி நாமும் எல்லா குழந்தைகளிடம் அன்பு பாராட்டுவோம்.

source: http://idrees.lk/

மன அமைதியைப் பெறுவது எப்படி?

-         320 888zrமன அமைதியைப் பெறுவது எப்படி?

“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28)

ஆம்! மேற்சொன்ன இறைவசனம் மனிதர்களுக்கு நிம்மதியைப் பெற வழி வகுக்கும் என்றால் அது மிகையாகாது.

இன்று மனிதர்கள் எவ்வளவோ வளர்ச்சியடைந்து, தொழில்நுட்பத்தின் மூலமும், பொருளாதாரத்தின் மூலமும் எவ்வளவோ முன்னேறி விட்டான்.

தங்களுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. இதையெல்லாம் வைத்து மனிதனால் எவ்வளவோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தளவுக்கு, அவனுடைய உள்ளத்துக்கு நிம்மதியை வாங்க முடியவில்லை.

அவனுடைய உள்ளம் நிம்மதியின்றி அலைந்து கொண்டிருக்கின்றது. இதைப் பெறுவதற்கு அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.

இன்று மனிதர்களுக்கு இரண்டு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியான நோய். மற்றொன்று மன ரீதியான நோய். உடல் ரீதியான நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்கின்றான். மன ரீதியான நோய்க்கு மருந்து எடுக்கத் தவறி விடுகின்றான்.

இதனால் வரும் பிரச்னைகள் ஒன்றல்ல. நூறல்ல. ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதனால், தூக்கமின்மை, மலச்சிக்கல், தலைவலி, ஞாபக மறதி, கவனமின்மை போன்ற நோய்கள் நம்மை அறியாமலேயே ஆட்கொண்டு விடுகின்றன.

இந்த நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்கின்றோம். ஆனால், இந்த நோய்களுக்குக் காரணமான மனதளவிலான பிரச்னைக்கு தீர்வு என்ன என்பதைப் பற்றி சிந்திக்கத் தவறி விடுகின்றோம். அதனால்தான் இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

“இறைவனின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அவற்றை உங்களால் என்ன முடியாது.” (அல்குர்ஆன் 14: 34)

நிச்சயமாக இறைவன் நமக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளை எண்ணிப் பார்க்க தவறி விடுகிறோம். அதை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக இறைவனை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம்.

உலகைப் பார்க்க அழகான கண்களை நமக்கு தந்திருக்கின்றான். நல்லதைக் கேட்க காதுகளைத் தந்திருக்கின்றான். நல்லதைப் பேச நாவைத் தந்திருக்கின்றான். அழகான முடி, அழகான கை, கால்கள், அழகான முடி, அழகான பற்கள் – இவையெல்லாம் நமக்கு யார் கொடுத்தது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

நம்முடைய தாய், தந்தையரால் வாங்கித் தர முடியுமா? உறவினர்களால் வாங்கித் தர முடியுமா?நண்பர்களால் வாங்கித் தர முடியுமா? இது இறைவன் நமக்குத் தந்த அருட்கொடைகள். எதை வேண்டுமானாலும் பணங்களைக் கொடுத்து வாங்கி விடலாம். பொருட்களைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை இல்லை என்றால் சமூகம் நமக்கு கொடுக்கும் பெயர் ‘ஊனம்’.

இப்பொழுது சிந்தியுங்கள்! நாம் ஏன் இறைவனை நினைவு கூர்வதிலிருந்து விலகி நிற்கின்றோம்? ஏன் அவனுடைய படைப்புகளைப் பற்றி சிந்திக்க தவறுகிறோம். அவனுக்கு நன்றி செலுத்த மறுக்கின்றோம்.

இதை வரும் காலத்தில் நம்மை நாமே கேட்டுக் கொண்டு, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இறைவனை தினமும் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வோம். பூரண மன அமைதியைப் பெறுவோம்.

-நெல்லை சலீம்

எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது?

இன்று பெற்றோர்களுடன் பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்? அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் சிறப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஹதீஸிலே வந்துருக்கிறது, ‘சொர்க்கத்துடைய கதவுகளில் மேலான கதவு ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அதனை பாதுகாத்து கொள்ளலாம் அல்லது அதனை வீணாக்கி விடலாம்.’

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.. ”நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மேலான அமல் எது? எனவும் அல்லாஹு தாஆலாவிற்கு எல்லாவற்றையும் விட மிகவும் விருப்பமான அமல் எது? எனவும் வினவினேன். அதற்கு அவர்கள் ‘தொழுகையை அதன தன் நேரத்திலே தொழுவதாகும்’ என்று கூற மீண்டும் நான் ‘அதற்கு பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் ‘தாய் தந்தையருடன் நல்ல முறையில் பழக வேண்டும்’ எனக் கூற மீண்டும் நான் ‘அதற்குப் பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதாகும்’ என நவின்றார்கள்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகின்றார்கள்.. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திலே ஒரு மனிதர் ஆஜராகி ‘நான் ஜிஹாதில் பங்கு கொள்வதற்காக வேண்டி உங்களிடத்தில் அனுமதி தேடுகிறேன்’ எனக் கூறினார். அதற்கு நாயகமவர்கள் ‘உம் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா? என வினவியதற்கு ‘ஆம்! உயிருடன் இருக்கின்றனர்’ என அம்மனிதர் பதிலளித்தார். ‘அவர்களுக்கு கித்மத் செய்வதைக் காட்டிலும் ஜிஹாதுடைய நன்மை குறைவுதான்’ என திருவாய் மலர்ந்தருளினார்கள்.”

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத் செய்கிறார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார், நான் ஹிஜ்ரத் செய்யும் நாட்டம் கொண்டு வந்துள்ளேன். நான் வரும்போது என் தாய் தந்தையரை அழும் நிலையில் விட்டு விட்டு வந்தேன்’ எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உடனே நீர் திரும்பி செல்வீராக! அவர்கள் இருவரையும் எப்படி நீர் அழ வைத்தீரோ அந்த விதம் சிரிக்க வைக்க வேண்டும்’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அறிவிக்கிறார்கள்; ”எந்த மனிதன் தன் இரணம் அபிவிருத்தி அடையவும் இன்னும் ஆயுள் நீடிக்கவும் இன்னும் சந்தோஷமாக இருக்கவும் விரும்புகிறானோ அவன் விருந்தினர்களை சங்கை செய்யவும் இன்னும் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடக்கவும்.”

ஹஜ்ரத் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றோர்களுக்கு அடிபணிகிரவர்களை பார்த்து இச்சொற்களை கூறினார்கள்.. ‘பெற்றோர்களுக்கு அடிபணிபவர்கள் மீது பரக்கத் உண்டாவதாக! அல்லாஹு தஆலா அவருடைய ஆயுளை நீடிக்க செய்வானாக!”

உங்கள் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும் உமக்கு முன்பாக அவர்கள் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ வயோதிகத்தை அடைந்து விட்டால் (அவர்களின் இயலாமையை, பலஹீனத்தை நினைத்து) எப்பொழுதும் ‘சீ’ என்று கூறாதீர்கள் இன்னும் அவர்களிருவரையும் விரட்டாதீர்கள், இன்னும் அவர்களுடன் மிருதுவாகவும் அன்பாகவும் எப்பொழுதும் பேசுங்கள்.

ஹஜ்ரத் மாலிக் இப்னு ரபியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ”யா ரசூலல்லாஹ்! தாய் தந்தையர் இறந்த பிறகும் அவர்களின் பணிவிடை பிள்ளைகள் மீது ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு ‘ஆம்’ என்று சொன்னார்கள். மேலும், ”தொழ வேண்டும். தாய் தந்தையருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவர்கள் யாரிடமேனும் ஏதேனும் வாக்கு கொடுத்திருந்தால் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு யார், யார் உறவினர்கள் இருந்தார்களோ அவர்களுடன் நல்லபடி நடக்க வேண்டும். தாய் தந்தையர் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் கண்ணியம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் தாய், தந்தையர் இறந்த பிறகு நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அடங்கி உள்ளது.” (ஆதாரம்: அபூதாவூது)

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்… நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், பெற்றோர்களுக்கு என்ன செய்வது? அவர்கள் இறந்த பிறகு என்ன கடமைகள் உள்ளது? என்று அறியாதவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

இன்று பிள்ளைகள் எந்த அளவுக்கு பெற்றோர்களுக்கு மரியாதையும், கண்ணியமும், கனிவான சொற்கள் தருகிறார்கள் என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு பயந்தக் காலம் போய்விட்டது. இப்போது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயப்படுகிறார்கள். எத்தனை பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுக்காக துஆச் செய்கிறது? கடமைக்காகவும், சடங்குக்காகவும் தான் செய்கிறார்கள் ஒழிய உண்மையான பாசத்திற்காக அல்ல. பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்க்க வரமாட்டார்கள். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு ஓடி வருவார்கள்.

எதற்க்காக? இந்த நடிப்பு? யாருக்காக இந்த பற்று? ஊரு மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். பெற்றோர்களை கதற வைக்கும் சில பிள்ளைகள். கண்ணீரில் முழுக வைக்கும் சில பிள்ளைகள். மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்றோர்களை மன வேதைனைச் செய்யும் சில பிள்ளைகள். அவர்களும் ஒரு நாள் பெற்றோர்கள் நிலைக்கு வருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது புரியவில்லையா? இன்று பெற்றோர்களின் நிலைமை ரொம்ப மோசமாக தான் போய்கொண்டு இருக்கிறது.

சில வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கார்களைப் போன்று நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. அல்லாஹ்விடம் யாரும் தப்பிக்க முடியாது . அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.. தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலமாக தான் சுவனத்தைப் பெற முடியும் என்று தெரிந்தே நாம் அலச்சியமாக இருக்கிறோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன் .

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்


12345அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)

* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60)

* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (c2:272)

* (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:49)

* நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 23:62)

* ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 46:19)

* எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (அல்குர்ஆன் 20:112)

* எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். (அல்குர்ஆன் 6:160)

* தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 19:60)

* நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

* (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)

* ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:47)

* பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 36:69)

* அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான். (அல்குர்ஆன் 40:31)

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது – உயர்ந்தோன் அல்லாஹ் – பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!

ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை! Continue reading

குடும்பத்தில் அமைதி

Image

குடும்பத்தில் அமைதி

பெரும்பாலான குடும்பத்தில் கணவன் மனைவி என்ற இருபாலரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தான்தோன்றித் தனமாக நடப்பதும், கணவனின் தியாகத்தையும் மனைவியின் தன்னலமற்ற சேவையயை போற்றாமல் இருப்பதே பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

அந்த பிரச்சனைகளின் மைய வடிவமாக குழந்தை வளர்ப்பு என்பது கேள்விக் குறியான ஒன்றாகிவிடுகின்றது. நல்ல கணவன் மனைவியாக வாழ மறுக்கும் தம்பதியினர் குடும்பம் என்னும் பல்கலைகழகத்தை எப்படி வழி நடத்தமுடியும்? Continue reading

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

Image

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

தமிழகத்தில் “தொட்டில் குழந்தை’ என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.

கன்றைப் பிரிந்த பசு, குட்டியைப் பிரிந்த ஆடு, குஞ்சைப் பிரிந்த கோழி போன்ற உயிரினங்கள் கூட கத்தி, கதறி அழுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசப் பிணைப்பு! நேச இணைப்பு!

அந்த உயிரினங்கள் தங்கள் குட்டிகளை அம்போவென்று விட்டு விட்டுப் போய்விடுவதில்லை. தனது சந்ததிகள் சொந்தக் காலில் நிற்கின்ற வரை, தங்கள் உணவை தாங்களே தேடிக் கொள்கின்ற வரை அவற்றைப் பாலூட்டி, உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன. Continue reading

ஏழு வயதினிலே!

Image

ஏழு வயதினிலே!

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள்.” (ஸுனன் அபூ தாவூத்)

“Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds.” (Narrated by Abu Dawood)

ஏன் ஏழு வயது? நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு! ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். Continue reading

அவளொரு முஸ்லிம் பெண்

Image

அவளொரு முஸ்லிம் பெண்

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும். Continue reading

ஏழு வயதினிலே!

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும் போது அவர்களுக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள். அவர்களுடைய படுக்கைகளைப் பிரித்து விடுங்கள்.” (ஸுனன் அபூ தாவூத்)

“Teach your children to pray when they are seven years old, and smack them if they do not do so when they are ten, and separate them in their beds.” (Narrated by Abu Dawood)

ஏன் ஏழு வயது? நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குப் பழக்கி விட (habit formation) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்த வயது ஏழு! ஏனெனில் குழந்தைகளுக்குத் தொழுகையை கற்றுக் கொடுப்பதில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். Continue reading