அம்மா… நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

Mother-and-Baby

அம்மா…

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கைகால்களைஅசைத்திருக்கிறேன்.

கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.

எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.

அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.

என்னவோ தெரியவில்லை… இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.

இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம்மாறி எங்கோ நகரத் தொடங்கியது.

நான் தலை கீழாக மாறிவிட்டேன்.

அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.
இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.

எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.

ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.

திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.

சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோசெல்கிறேன்.

இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.

ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.

கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.

ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.

அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.

தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.

என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ… என்று இளிக்கிறார்கள்.

அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.
அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.

என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.

நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.

கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.

அவர் மாதிரியே இருக்கான் இல்ல… என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.

அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.

எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள்
என்னைத் தூக்குகிறது.

தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.

மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.

அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.

அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.

நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.

எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை…

என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று.

பின் குறிப்பு:
படித்ததில் மிக பிடித்தது…
இருப்பினும் இதை எழுதியவர் யாரென்று தெரிய வில்லை…
அவர் எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் வாழ்க வளமுடன்…

அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

22222223அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!

மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சிலசமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)

   அபூபக்கர், அதிரை   

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகின்றவன் யார்? (அல்குர்ஆன் 6:63)

இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

(நபியே!) நீர் கூறும், உங்கள்(தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படிச் செய்யவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக(நம்) வசனங்களை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 6:65)

மனிதனை(ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.(அல்குர்ஆன் 10:12)

அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்ய வைக்கிறான். (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது சாதகமான நல்ல காற்றினால் அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி யடைகிறார்கள், பின்னர் புயல் காற்று வீசி எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும்போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே) என்று எண்ணுகிறார்கள், அச்சமயத்தில் தூயஉள்ளத்துடன், நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றிவிட்டால் மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். (அல்குர்ஆன் 10:22)

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து, பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.(அல்குர்ஆன் 11:9)

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 11:10)

மேலும், எந்த நிஃமத்(பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும். பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டுவிட்டால் அவனிடமே நீங்கள் முறையிடுகிறீர்கள். பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கி விட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர். (அல்குர்ஆன் 16:53,54)

மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சிலசமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் தீண்டினால் அவனையன்றி நீங்கள் எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவை யாவும் மறைந்துவிடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும்பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள். இன்னும் மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:67)

(கரை சேர்ந்த)பின் அவன் உங்களைப் பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்துவிட மாட்டான் என்றோ அல்லது உங்கள் மீது கல் மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காணமாட்டீர்கள். (அல்குர்ஆன் 17:68)

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து (எல்லாவற்றை யும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீது அனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என நம்மைத் தொடர்ந்து உங்களுக்காகக் (கேட்போர்) எவரையும் காணமாட்டீர். (அல்குர்ஆன் 17:69)

இன்னும், மனிதர்களில் (ஓர் உறுதியும் இல் லாமல்) ஓரத்தில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான், ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான், இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)

அவன் அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான். இதுதான் நெடிய வழிகேடாகும். (அல்குர்ஆன் 22:12)

(கப்பலில் செல்லும்) அவர்களை, மலை முகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால் அல்லாஹ்வுக்கு வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர், ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்துவிட்டால் அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள். எனினும் மிகவும் நன்றிகெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

மேலும் மனிதர்களில் சிலர் நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று சொல்கிறார்கள். எனினும் அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைப்போல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள், ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடனேதான் இருந்தோம் என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா? (அல்குர்ஆன் 29:10)

மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்களே, பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்க செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.(அல்குர்ஆன் 30:33)

இன்னும் நாம் மனிதர்களை(நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால், அவர்கள் அதைக்கொண்டு மகிழ்கிறார்கள், ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள். (அல்குர்ஆன் 30:36)

இன்னும், மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழைக்கின்றான், பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்துக் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக! உன் குஃப்ரைக் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்று முள்ளவனே. (அல்குர்ஆன் 39:8) Continue reading

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்?

12715293_1221344741212972_2373857231403734419_n

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்?

(சிறார்கள் மட்டுமின்றி பெரியோர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்)

1. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?

2. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?

3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?

4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?

5. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?

6. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?

7. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?

8. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?

1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?

விடை:

தகப்பனார் அப்துல்லாஹ்,

பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ,

முப்பாட்டனார் ஹாஷிம்,

முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.

2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?

விடை:

ஹாரிஸ

கஸம

ஜுபைர

ஹம்ஸா (ரளியல்லாஹு அன்ஹு)

அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு)

அபூதாலிப

அப்துல் காப

முகைர

லர்ரார

கீதாக

அபூலஹப்

3. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?

விடை:

ஸஃபிய்யாஹ

ஆத்திக

அறவ

உம்ம

பார

உமய்ம

4. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?

விடை:

கதீஜா ரளியல்லாஹு அன்ஹா,

ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா,

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,

ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா,

உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா,

உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா,

ஜைனப் பின்த் கஸீனா ரளியல்லாஹு அன்ஹா,

மைமுனா ரளியல்லாஹு அன்ஹா,

ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா,

ஜைனப் பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா,

ஜுவைய்ரியா ரளியல்லாஹு அன்ஹா.

5. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?

விடை:

அல் காஸிம் (இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.)

இப்ராஹீம்

6. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?

விடை:

ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா,

ருகைய்யா ரளியல்லாஹு அன்ஹா,

உம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா,

ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா.

7. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?

விடை:

ஹஸன் ரளியல்லாஹு அன்ஹ

ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹ

முஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவராவர்.

8. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?

விடை:

ருகைய்ய

ஜைனப

குல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர்.

நன்றி: முகமதுஅலி.

மரணத்தின் வலி ஏற்படும் விதம்..!

fathima344                           

       மரணத்தின் வலி ஏற்படும் விதம்..!

         N. மீரான்    

உலகில் வாழும் பல உயிரினங்கள் குறித்தும் குர்ஆனில் பல அத்தியாயங்கள், வசனங்களில் கூறப்பட்டுள்ளது. குர்ஆன் தனக்கேயுரிய தனித்தன்மையால் விவரித்துக் கூறாமல் சுருக்கமாக, மறைபொருளாகவே ஒவ்வொன்றையும் கூறியிருக்கும். அந்த மறை பொருளாகக் கூறப்பட்டிருப்பதை கீழ்க்காணும் வசனங்கள் நமக்கு உணர்த்தும்.

“அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்து வானவர்கள் அவர்களை மரணிக்கச் செய்யும்போது எப்படியிருக்கும்“ (அல்குர்ஆன் 47:27)

(ஏக இறைவனை) உயிர்களைக் கைப்பற்றும் போது, அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!” (அல்குர்ஆன் 8:50)

o உங்கள் முகங்களிலும், முதுகுகளிலும் என்ற வார்த்தைகளை இறைவன் கூறியிருப்பதற்கான கேள்வி நமக்குள் எழும்பும். விடை காணவும், மனிதனால் எளிதாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆனாலும், ஒரு உம்மத்தாக இறைவன் வஹியாக அனுப்பிய செய்தியை விளக்க கடமைப்பட்டுள்ளோம். இது நம்முடைய பணி:

“கடினமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது சத்தியமாக”. (அல்குர்ஆன் 79:1)

“மென்மையாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது சத்தியமாக”. (அல்குர்ஆன் 79:2)

o இரண்டு விதமாக மனித உயிர்களைப் பிடிப்பதாக, மலக்குகள் மீது சத்தியமிட்டுக் கூறுகிறான் இறைவன்.

o மரணத்தருவாய் துன்பம் தருவது: இந்த துன்பம் மனித உடலில் எங்கிருந்து வருகிறதெனில், மனித உடலில் உணர்ச்சி மண்டல நரம்புகள் மூலமாக மூளைக்கு வலியின் உணர்வுகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

உடம்பின் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி மண்டல நரம்புகள் இருக்கின்றன:

மனித உடம்பு முழுவதுமுள்ள தோல்களில் இருக்கும் உணர்ச்சி செல்களுக்குப் பெயர் “Corpuscles – கார்ப்ப செல்ஸ்”.

இதன் பணி, ‘தொடு உணர்ச்சி, தட்பவெப்ப உணர்ச்சி, வலி உணர்ச்சிகளைத் தோல்களில் கண்டறியக் கூடியது. மனித தோல்களில் எங்காவது வலி ஏற்பட்டால் அதற்கான செய்தியை பிற நரம்புகள் மூலம் மின் துடிப்புகளாக முதுகுத் தண்டுவடத்திற்கு கொண்டு செல்லும். பின்னர் மூளைக்குச் செல்லும் பகுதியான “Spinothalamic- ஸ்பைனோதலாமிக்” பாதையில் மூளைக்குக் கொண்டு சேர்க்கும்!

தோல் வெளிக்காட்டும் வலிகளை இந்த ஸ்பைனோதலாமிக் தான் மூளையிலிருந்து கொண்டு செல்கிறது!

தோல்வழியாக வலிகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் மின் துடிப்புகள் உடலின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்றன.

உடலின் ஒரு பகுதியில் சூடுபட்டால், மூளையில் இருக்கும் சுற்றுகளுக்கு உடனடி சமிக்ஞையாக முன் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள கார்ப்பசெல்கள் அசுர வேகத்தில் பயணித்து எடுத்துச் செல்கின்றன. அதே போன்று, தட்பவெப்ப உணர்ச்சி செல்களில், உடலியல் நரம்புகள் இணைந்திருந்தால் தட்பவெப்பம் மாறும்போது உடனடியாக மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பணிகள் இருப்பதால், முன் தயாரிப்பு எச்சரிக்கையுணர்வுடன் பணியாற்றுகின்றன!

o உடம்பிலுள்ள நரம்புகள், இணைப்புகள், தொடர்புகள் மூளையின் சுற்றுகளோடு எங்கு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மனிதரால் கணக்கிட முடியாது.

தாயின் கருவில் குழந்தையாக இருக்கும் போது இவைகளை, இறைவன் வளர்க்கிறான். இவையனைத்தும் உடலுள் கடினமாகப் பிணைக்கப்பட்டிருப்பதால், மனிதனால் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

மனித உடம்பின் வெளி உறுப்புகள் அகற்றப்பட்டாலும், அகற்றப்பட்ட இடத்தின் நுனியில் உணர்ச்சி நரம்புகள் இருந்தால், அந்த இடத்தில் மின் துடிப்புகள் இருக்கும். அதன் காரணமாக வலி உணர்ச்சி ஏற்படும்.

முன் கூறப்பட்டுள்ள வலி உணர்ச்சிகளில் “nociseptive – நோசிசெப்டிவ்” என்ற ஒன்றிருக்கும். உண்டாகும் வலியை அதிகமாக்கிக் கொண்டு செல்லக்கூடியது இது. உறுப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் இந்த நோசி செப்டிவ் இருக்காது. அதனால் வலி வெளிப்படையாக உணரமுடியாது. அகற்றப்பட்ட நபருக்கு வரக்கூடிய வலியை மருத்துவ உலகம் “phantom pain – மறைமுக வலி” என்று பெயிரிட்டிருக்கிறது.

மனிதருக்குள் இருக்கும் உணர்ச்சி மண்டல நரம்புகள் உடம்பின் உள்ளே உள்ள உறுப்புகளிலிருந்து ஆரம்பித்திருக்கும். ஒட்டுமொத்த உறுப்புகளுடைய நரம்புகளும் முதுகுத்தண்டுக்குச் சென்றடைந்து கொத்தாகக் குவிந்திருக்கும். இதனை “முதுகின் வேர்கள்” எனக் குறிப்பிடுவர்.

உறுப்புகளிலிருந்தும் உணர்ச்சி நரம்புகள் தொடங்குவதால், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் நோய் வந்தால், இந்த உறுப்புகளிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி சமிக்ஞைகள் வலியை உணர்த்தாது.

முதுகுத்தண்டுகளில் கொத்தாகக் குவிந்திருக்கும் உணர்ச்சி நரம்புகளிலிருந்து வலி வெளிப்படும்! எடுத்துக்காட்டுக்கு இதய சம்பந்த நோய் வந்துள்ள நபருக்கு, இடது புஜத்தில் வலி ஏற்படும்! தொடக்க இடத்தில் காட்டப்படாத வலி, முடிவு இடத்தில் உண்டாகிக் காட்டும்.

ஆழ்ந்த உறக்கத்திலிருப்போர், தன்னுணர்வற்ற நிலையி ல் இருப்போரால் வலிகளை உணர முடியாது. காரணம், மூளையில் இருக்கும் உணர்ச்சி மண்டலம் மூலம் மூளைக்குச் செல்லும் உள்ளீடுகள் தடை செய்யப்பட்டிருக்கும் இது உடலுக்கும், மூளைக்குமான தொடர்பு.

ஆன்மாவுக்கும், மூளைக்குமான தொடர்பு என்ன என்று ஆராய்ந்தால், அறிதல் மிகமிகக் குறைவு! மரண அனுபவமும், இறை நம்பிக்கையும் வேறு, வேறு! வலியின் உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவுக்கும் தொடர்பு இருக்கின்றதா?

உறங்கிய நிலையில் ஒருவர் இறப்பை சந்தித்தால் அவர் எந்த வலியையும் உணர முடியாது.

உறக்கத்துக்கும், இறப்புக்குமான செய்திகள் பலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

“இறைவா! உன் பெயராலேயே வாழ்கிறேன். உன் பெயராலேயே இறப்பேன்” என்று உறங்கச் செல்லும் முன்பு கூறுவார்கள். எழும்பிய பிறகு “இறைவா! இறப்புக்கு அடுத்து எனக்கு ஒரு வாழ்வைத் தந்துள்ளாய்” என்று கூறுவார்கள். (நூல்: ஸஹிஹ் முஸ்லிம் – 35:6549)

“அவன் தான் உங்களை இரவில் மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றை எல்லாம் அறிந்திருக்கிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; (அல்குர்ஆன் 6:60) Continue reading

மன திருப்தி

-yy

மன திருப்தி

எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி)

செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி, முஸ்லிம், திர்மிதி)

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
http://www.readislam.net/portal/archives/4443#comment-4428

பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்

6666 பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

திருக்குர்ஆனில் ஏராளமான ‘துஆ’க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ‘துஆ’வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு “அவனிடம்” கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா?

தொழுகையாளிகளில் எத்தனை பேர் ‘துஆ’வின் அர்த்தத்தை விளங்கி ‘துஆ’ கேட்கிறோம்? மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற ‘துஆ’வுக்கு “ஆமீன்” சொல்வதோடு சரி…! அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம் நமது இமாம்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைப்புதான் காரணமோ என்னவோ?!.

மேலுள்ள திருக்குர்ஆனிலுள்ள (நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்டதாக அல்லாஹ் குறிபிட்டுள்ள)ஒரு ‘துஆ’வின் அர்த்தத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள். எவ்வளவு பொருள் நிறைந்த ஒரு அற்புதமான ‘துஆ’ இது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

இம்மை, மறுமை இரண்டிற்குமே பயனளிக்கும் இந்த பிரார்த்தனை; கலிமா சொன்ன ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ‘துஆ’ என்று சொன்னால் அது மிகையல்ல.

நமது பகுதி முஸ்லிம்கள் கூட்டு ‘துஆ’வை மட்டும் போதுமானதாக ஆக்கிக்கிகொண்டதால் ‘துஆ’வின் அர்த்தத்தைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ…!

பொருள் விளங்காமல் கேட்பது எவ்வளவு விசித்திரமான வினோதம் என்பதையெல்லாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

”தன்னிடம் கேட்காத அடியானைப்பற்றி அல்லாஹ் கோபம் கொள்கிறான்” என்பதை மறந்தது எனோ?!

எதையெதையோவை எல்லாம் மனப்பாடமிடும் நாம் அல்லாஹ்வும் அவனது ரஸூலும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பிரார்த்தைகளை பொருளுணர்ந்து கற்பதில் அலட்சியம் செய்வது எவ்வளவு பெரிய கைசேதம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

திருக்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு ‘துஆ’வும் மகத்தான பொக்கிஷம் என்பதை மறந்திட வேண்டாம்.பொக்கிஷத்தை உதாசீனப்படுத்தினால் நஷ்டம் நமக்குத்தான்.

மேலே உள்ள துஆ…

ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் வாழக்கூடிய காலத்திலேயே தங்களது பிள்ளைகளுக்கு மேலே உள்ள துஆ’வை கற்றுக்கொடுத்தால் தான் அவர்கள்(பெற்றோர்கள்) வாழும் காலத்திலும், மரணித்த பின்பும் அவர்களின் சந்ததிகள் ‘தங்களது பெற்றோர்களுக்காக’ அல்லாஹ்விடம் அழகிய முறையில் “அவன்” குறிப்பிட்டுள்ள முறையில் பிராத்தனை செய்ய இயலும்.

‘துஆ’ ஒரு மிகச்சிறந்த வணக்கம் என்பதை மறந்துவிட வேண்டாம். இன்றே முயற்சி எடுப்போம், நாம் மட்டுமல்ல நமது குடும்பத்தார்கள், உற்றார்கள் உறவினர்கள், ஊர்மக்கள் அனைவரும் இந்த மிக மிக முக்கியமான வணக்கத்தை கற்றுக்கொள்வதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அல்லாஹ் நல்லருள் புரிவானாக

– எம்.ஏ.முஹம்மது அலீ

 

 

உம்ரா செய்வது எப்படி?

ww    ‘ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

‘ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.
 
உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.

 

இஹ்ராம் :

மீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)
 பர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ்உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2194, 2195
உம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً(லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.
 

(  இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்டவைகள்     கடைசியில்     தரப்பட்டுள்ளது  )  

இஹ்ராமின் போது இறந்தவர் தல்பியா சொல்லி எழுவார்
(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்து விட்டது. (அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1266, முஸ்லிம் 2092
  2.தல்பியா
உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்லாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ (அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்.)

”லப்பைக்அல்லாஹும்ம லப்பைக்லப்பைக் லாஷரீக லக லப்பைக்இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்கலாஷரீக லக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1549, 5915
‘தல்பியாவின் சிறப்பு’
எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்: திர்மிதீ 758
3. தவாஃப் செய்தல்:

மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.    அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1611
அவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வ திலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.

ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.

ஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.
தவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியா விட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)   நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தவாஃப் அல்குதூம்‘ செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 1644, 1617
    ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை,
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்நான்கு மூலைகளில் “யமானி‘ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   நூல்: புகாரி 166, 1609
ருக்னுல் யமானிக்கும்ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار (ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”) என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)   நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
 
(பொருள்: எங்கள் இரட்சகா! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத் தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.
தவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.
தவாஃபின் சிறப்பு
யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2947
சாட்சி சொல்லும் ஹஜருல் அஸ்வத்
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதீ 884

 4. தவாஃப் செய்து முடிந்தால்…?:
தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்றுதொழ வேண்டும்.(முஸ்லிம் 2137 (முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.

இந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.
தொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.

ஜம்ஜமின் சிறப்பு
அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 4520
  5. ஸயீ செய்வது:
தவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு “ஸஃபா‘ “மர்வாவுக்கு இடையே ஓடினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி(  நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
ஸஃபாவை நெருங்கும் போது……..,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்றإِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو
اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ (2:125) வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி لآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ )إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹுலஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தாஅன்ஜஸ வஃதாவநஸர அப்தாலஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” )என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) “பதனுல் வாதீ‘ (பச்சை அடையாளம் இடப்பட்ட  தூண்களுக்கு இடையில்)என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்கள்: முஸ்லிம் 2137
(பதனுல் வாதீ‘ என்ற இடத்தில்  . பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)

ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்

ஸஃபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும்.
”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்”. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)   நூல்: முஸ்லிம் 2137

ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை.
 6. ஸயீ முடிந்ததும்:
ஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.
கத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: அபூதாவூத் 1694
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல்பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது
——————————————————————————————————–
இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.

1. குளித்தல்.

2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
 . ஸஃபாமர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7 . தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.

உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2. கஅபாவை தவாஃப் செய்தல், 3. ஸஃபாமர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்

மழித்துக் கொள்பவருக்கு மன்னிப்பு
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், “முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1727

***************************************************************************************************************************  இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்

1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும்உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோதலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.  (அல்குர்ஆன் 2:196)
பேன்பொடுகுபுண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.
ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று “ஸாவு‘ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.   அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

2. நகங்களை வெட்டக் கூடாது. 

 உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)  நூல்: முஸ்லிம் 3653, 3654

குர்பானி கொடுப்பவர் முடியையும்நகங்களையும் வெட்டக் கூடாது” என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.

3. நறுமணம் பூசக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோதலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா‘ கூறியவராக எழுப்பப் படுவார்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851
அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப் படுவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.

4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)  நூல்: முஸ்லிம் 2522, 2524

      5உடலுறவு கொள்ளக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோகுற்றம் செய்வதோவிதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197)

6. ஆசையுடன் தொடுதல்கட்டியணைத்தல்முத்தமிடுதல் போன்றவை கூடாது. 

மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க ரஃபத்‘ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல்கட்டியணைத்தல்முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.

உடலுறவு தான் கூடாதுமற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

7. வேட்டையாடுதல் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும்உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:94)
நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடுமாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:95)
உங்களுக்கும்ஏனைய பயணி களுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும்அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங் கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப் படுவீர்கள். (அல்குர்ஆன்5:96)
இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை

1. தலையை மறைக்கக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோதலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா‘ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839
மறுமையில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.

2. தையல் ஆடை அணியக் கூடாது.

இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோதலைப் பாகையையோதொப்பியையோகால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம்வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்” என்று விடையளித்தார்கள்.  அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794

பெண்களுக்கு மட்டும் தடையானவை

இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)) நூல்: புகாரி 1838
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.
இஹ்ராமுக்குப் பின்னால் தடுக்கப் பட்ட காரியங்களில் ஆண்களும் பெண்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தாம்பத்யம் போன்ற காரியங்களில் ஈடுபட்டு ஹஜ்உம்ரா போன்ற வணக்கத்தைப் பாழாக்கி விடக் கூடாது.
தலைமுடி மற்றும் நகங்களைக் களைவது இஹ்ராமுக்குப் பின் தடுக்கப்பட்டு உள்ளதால் அவற்றை இஹ்ராமுக்கு முந்தியே முடித்து விட வேண்டும்.
இஹ்ராமின் எல்லையை அடைந்ததும், “லப்பைக்க உம்ரத்தன் ஃபீஹஜ்ஜத்தின்” அல்லது “லப்பைக்க உம்ரத்தன்” என்று கூற வேண்டும்.

இந்த இடத்தில் சிலர், ”நான் அல்லாஹ்வுக்காக உம்ரா செய்கிறேன்இந்த உம்ராவை இலேசாக்கி வை” என்பது போன்ற வார்த்தைகளைக் கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை

 உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்

-         310 821enஅல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்

நீதித் திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் ஜல்லஜலாலஹு அருள்கின்றான்:

”நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களுடைய சுகவாசத்தின் செழிப்பை நபியே நீர் கண்டறிவீர்.முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். போட்டியிட்டு ஆசை கொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். அதில் “தஸ்னீம்” என்ற வடிகட்டிய பானமும் கலந்திருக்கும். அது ஓர் அற்புதமான நீரூற்று ஆகும். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மதுவைவையும் அருந்துவார்கள்.” (அல்குர்ஆன் 83:22)

ஆள்பவனும் ஆற்றல் மிக்கவனுமாகிய அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மேலும் சொல்கின்றான்:

தங்கத் தட்டுகளும் கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருக்கும். மனம் விரும்பக் கூடிய, கண்களுக்கு இன்பம் அளிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும்.அவர்களிடம், ‘இங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தில் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணத்தால், இந்தச் சுவனத்திற்கு வாரிசாக நீங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் மகிழ்வுடன் உண்பீர்களாக!’ என்று கூறப்படும். (அல்குர்ஆன் 43:68)

இறைவனின் சிரிப்பில் எளியவனின் ஈடேற்றம்:

அல்லாஹ் ஜல்லஜலாலஹுவால் ஆசீர்வதிக்கப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சுவர்க்கவாசியின் நிலை குறித்து நவின்றார்கள்:

நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறி சுவர்க்கவாசிகளில் இறுதியாகச் சுவர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து கை கால்களால் தவழ்ந்தவராக வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர்! அவரிடம் அல்லாஹ் ஜல்லஜலாலஹு ‘நீ போய் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!’ என்பான். அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து, “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்’ என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ் ஜல்லஜலாலஹு ‘இல்லை. ‘நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!’ என்று மீண்டும் சொல்வான்.

அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்றே மறுபடியும் அவருக்குத் தோன்றும்! ஆகவே, அவர் திரும்பி வந்து ‘என் இறைவா! அது நிரம்பியிருப்பதாகக் காண்கின்றேனே?’ என்று கூறுவார். அதற்கு வல்லமையும் மாண்பும் நிறைந்த கருணையாளன் ‘நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில்,உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு இடம் சுவர்க்கத்தில் உனக்கு உண்டு!’ என்று சொல்வான்.

அதற்கு அம்மனிதர், ‘அரசருக்கெல்லாம் அரசன், பேரரசன் ஆகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைக் கண்டு சிரிக்கின்றாயா?’ என்று கேட்பார் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

இதை எங்களுக்குக் கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் கண்டேன்’.

‘இவரே சுவர்க்கவாசிகளில் தகுதியால் மிகவும் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார்’ என்று கூறப்பட்டு வந்தது. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6571)

உலகமெலாம் காக்கின்ற ஒப்பற்ற உயர் தலைவன் அல்லாஹ்வின் இத்தகைய எல்லை கடந்த கருணை குறித்து, கனிவுநிறைந்த கண்ணியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுனைன் யுத்தம் நிகழ்ந்த பொழுதில் இவ்வாறு கூறினார்கள்:

போரில் பிடிபட்டவர்களுள் ஒரு தாய்மை நிறைந்த பெண்மணியின் மார்பில் இருந்து தாய்ப்பால் ஒழுகிக் கொண்டிருந்தது. எனவே, கண்ணில் காணும் குழந்தைகளை எல்லாம் தூக்கித் தன் மார்போடு அணைத்து அவர்களுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த பேரறிஞர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தப் பெண், அந்தக் குழந்தைகளைத் தூக்கி நெருப்பில் போட்டுவிடுவாள்’ என்று நம்புகிறீர்களா? என்று தம் தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு ஒரு ஸஹாபி எழுந்து, ‘அவளுக்கு அத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்தால்கூட ஒருக்காலும் அவள் அப்படி செய்யமாட்டாள் யா ரசூலல்லாஹ்’ என்று பதிலளித்தார்.

ஞானமிகு தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் அன்பைவிட, உங்களின் இறைவன் பன்மடங்கு தன் அடியார்கள் மீது இரக்கம் கொண்டவன். (அறிவிப்பாளர்: உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5999)

இது போன்ற இன்னொரு சமயத்தில்தான், ‘அல்லாஹ்வின் தூதரே, நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?’ என்று கேட்டு நின்ற ஒரு மூதாட்டியின் சுவனம் பற்றிய கேள்விக்கு, ‘கிழவிகள் சுவனம் புகுவதில்லை!’ என்ற அதிர்ச்சியான ஒரு பதிலை அவருக்கு அளித்தார்கள் அண்ணலார்! அது கேட்டு மிகுந்த மனவருத்தத்தோடு போய்க் கொண்டிருந்த அவரைத் திரும்ப வரவழைத்து,

‘நீர் கிழவியாகச் சுவனம் புகமாட்டீர்! ஓர் எழில் மிக்க இளநங்கையாகவே சுவர்க்கத்தின் சிங்காரச் சோலைகளில், அதன் வண்ண மலர்க் கூட்டங்களில் மகிழ்ச்சியுடன் நுழைந்து செல்வீர்!’ என்று அவரை மனம் குளிரச் சிரிக்க வைத்தார்கள் வாய்மையின் அழைப்பாளர் வாஞ்சை நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அத்துடன் அவருக்கு இந்த அருள்மறை கூறும் அழகிய வாக்கியங்களை ஓதிக் காட்டினார்கள்:

“நிச்சயமாக, சுவர்க்கத்தின் பெண்களாகிய அவர்களை புதிய ஓர் அமைப்பில் நாம் உருவாக்கியுள்ளோம். அவர்களை நாம் கன்னிகளாகவும் தன் கணவனையே காதலிப்பவர்களாகவும் மேலும், சமவயது உடையவர்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம். (அல்குர்ஆன் 56:35)

பொன்மனச் செம்மல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பைப் பற்றிப் பாராட்டும்போது, “வாளேந்தி வன்சமர் புரிந்தெல்லாம் சாதிக்கமுடியாத சாதனைகளைக் கூடச் சீர்திருத்தவாதிகளில் எல்லாம் உயர்ந்தவராகிய நபிகள் நாயகத்தின் இனிய சொல்லும் புன்சிரிப்பும் சாதித்தது” என்ற வலிய உண்மையை ஓங்கி உரைத்தார் பகுத்தறிவுத் தமிழறிஞர் அண்ணாத்துரை.

“இங்கிலாந்து மட்டுமல்ல! இந்த ஐரோப்பா முழுவதையும் அடுத்த நூறு ஆண்டுகளில் ஏதாவது ஒரு மதம் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றால், நிச்சயமாக அது இஸ்லாம்’தான்” என்பதை ஆராய்ந்து முடிவாக எழுதினார் ஆங்கிலேயச் சிந்தனைச் சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.

மனிதகுலத்தின் மாணிக்கமாகிய மாண்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஓதுவீராக’ என்ற விண்ணகத்திலிருந்த வந்த அந்த ‘அசரீரி’யை எப்போது கேட்டார்களோ, அப்போதிருந்தே தம் உயிர்காற்றின் ஒவ்வொரு சுவாசத்தையும் ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையாகவே வெளியிட்டார்கள்!

இந்த உம்மத்திலிருந்து வந்த தனியொரு மனிதனின் நேர்வழி என்பது, தமக்குக் கிட்டிய ஈடேற்றமாகவே உணர்ந்து அதைப் புளகாங்கிதம் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார்கள் நமக்கு இன்ப நிலை பெற்றுத் தந்த அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இந்த ஒரே நோக்கத்திற்காகவே, தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய சிறிய தந்தை மாவீரர் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹுவை, மறைந்திருந்து கொன்ற ‘வஹ்ஷி’யையும் கூட மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் அருள் வடிவான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இதன் விளைவாக, ‘வீழ்ந்தவருக்குச் சுவர்க்கமும் வாழ்பவருக்கு வெற்றியும்’ அந்த உத்தமத் திருநபியால் உறுதியானது! அகிலத்தின் வரலாற்றில் இதற்கு ஈடான இன்னொரு காட்சியை நாம் காணவே முடியாது! மனித சமூகத்தின் மீட்சியின் மீது இந்த அளவிற்குக் கருணையும் கனிவையும் வெளிப்படுத்தி நின்ற உயர்ந்த இலக்கணத்திற்கு உரியவரான இந்த மாமனிதரின் கால் தூசிக்குக்கூட மனித குலத்தின் வரலாறு படைத்தோர் என்ற வரிசையில் நிற்கும் வேறெந்த மனிதரும் நெருங்கி நிற்க முடியாது! (அறிவிப்பாளர்: 152 அபுல்கலாம் ஆஸாத், நூல்: ரஸூலே அஹ்மத்)

ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, இரண்டாவதாக வந்த ‘வஹீ’யில் ‘எழுந்து நிற்பீர்! எச்சரிப்பீர்!’ என்ற மேலோன் அல்லாஹ்வின் கட்டளையைக் கண்ட அந்தக் கணத்தில் எழுந்து நின்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைக் குரல் ‘பாலைகளிலும் சோலைகளிலும் பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும் மேடுகளிலும் அதையும் தாண்டி நிற்கும் தீவுகளிலும்’ தடையில்லாமல் தம் இலட்சிய வாழ்வின் இறுதி நேரம்வரை மக்களை நல்வழிப்படுத்திய வண்ணம் ஒலித்துக் கொண்டே இருந்தது! இறுதிவரை இவ்வுலகில் சாதிக்க வந்த ஆதிக்க நாயகராகவே வரலாற்றில் மிளிர்ந்து நின்றார்கள் மணிமொழி பேசும் மன்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!

ஒப்பற்ற ஒரே இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் அரும் பணியில், தம் உன்னதமான அழைப்புப் பணியின் ஒரே இலக்கான ‘ஏகத்துவம்’ என்ற வெற்றிக் கனியை இருபத்தி மூன்று ஆண்டுகளில் தம் கண்களாலேயே கண்டு, தம் கைகளாலேயே பறித்து, அதைப் பொக்கிஷமான ஒரு பரிசாக நமக்கு அளித்துச் சென்றார்கள் நம் சமுதாயக் காவலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். இந்த அரிய முயற்சியில் மூழ்கி நின்ற களப்பணிகளில் அண்ணல் அவர்கள் அடைந்த இன்னல்களை அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள்:

“அல்லாஹ்வுக்காக வேறு எவரும் பயமுறுத்தப்படாத அளவுக்கு நான் பயமுறுத்தப்பட்டேன்! அல்லாஹ்வுக்காக வேறு எவரும் துன்புறுத்தப்படாத அளவுக்கு நான் துன்புறுத்தப்பட்டேன்! இந்த உலகில் வேறு எந்த உயிர்ப்பிராணியும் தின்ன விரும்பாத, ‘பிலால்’ தனது அக்குளில் மறைத்து வைத்திருந்த உணவைக்கொண்டு முப்பது நாட்கள் தொடர்ச்சியாய்க் கழிந்திருக்கின்றன!” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஷமாயில் திர்மிதீ 37)

இவ்வாறு தம் வாழ்வாதாரங்களை நமக்காகவே சுருக்கிக்கொண்டவராக, ஏழ்மையில் தூய்மையும் எளிமையில் இனிமையும் கண்டவராக, தியாகத் தலைவர் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு இடரும் அல்லாஹ்வின் இத்தூய மார்க்கத்தை வளரச் செய்ததே தவிர, ஒருபோதும் அதைத் தளரச் செய்யவேயில்லை!

வான்மறையை ஏந்தி வந்த வண்ண ஒளியாக, தேன் சுரக்கும் திருமறையாகவே வாழ்ந்து காட்டிய திருத்தூதராக, உள்ளங்களையே ஊடுருவிச் சென்று தம் தோழமையால் தொட்டு வந்தவராக, உண்மையின் உணர்வலைகளை உசுப்பி எழுப்பியவராக, அறிவின் செறிவையே அடையாளம் கண்டவராக, அரிய குணங்களின் நிறைகுடமாய் நிமிர்ந்து நின்றவராக, ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாக ஒளிவீசி வந்தவராக, இனிய பண்புகளின் முழுமையானவராக, தம் இறுதி மூச்சுவரை தமது உம்மத்துகளைப் பற்றியே அக்கறையில் ஆழ்ந்திருந்தவராக, கட்டுக் கோப்பான ஒரு மாபெரும் சமுதாயத்தையே உருவாக்கிய மகத்தான சரித்திரத்தின் தலை நாயகராக, இவ்வாறான வேறு எந்த மனிதரோடும் ஒப்பிட முடியாத ஒரு சத்திய சீலராக வாழ்ந்து காட்டிய, சாந்த நபியின் தனிப்பெரும் ஒப்பற்ற தியாகங்களைப் பற்றி எல்லாம்,

சற்றே ‘நம் வாழ்வின், இரவின் இருள்களிலும் தனிமையின் வெறுமைகளிலும் பயணங்களின் ஓட்டங்களிலும் காத்திருப்புகளின் கண நேரங்களிலும் வசதிகளின் உச்சங்களிலும் மன மகிழ்ச்சியின் கொண்டாட்டங்களிலும் கொஞ்சமாவது அல்லது ஒரு நாளின் சில மணித் துளியிலாவது நாம் சிந்தனைக்குக் கொண்டுவந்து, அவர்களின் ‘அழகிய முன்மாதிரி’யை ஆராய்ந்து பார்த்து இருக்கின்றோமா? அல்லது ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பத்து முறையாவது அவர்கள் மீது அன்புடன் ‘ஸலவாத்’ சொல்லியாவது நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா என்பதையும் சற்றே உணர்ந்து நாள்தோறும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியது இன்றையச் சூழலிலும் இன்னும் இறுதிக் காலம் வரையிலும் அது ஒரு கட்டாயமும் நம் கடமையுமாகும்!

“நீங்கள் உண்மையாகவே உங்களைப் படைத்த அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை முழுமையாகப் பின்பற்றுங்கள். அப்படியானால்தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்”. (அல்குர்ஆன் 3:31)

என்ற இறைக் கட்டளையை நமக்கு அறிவுறுத்துமாறு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஜல்லஜலாலஹு, ‘அகிலத்தின் அருட்கொடையாகிய’ தன் தூதரின் உயர்வைப் பிரகடனப் படுத்துகின்றான். அவ்வாறு அழகிய முன்மாதிரியாக, பின்பற்றக் கூடிய எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இறைத் தூதரின் அபூர்வமான குணங்களுக்கும் அற்புதமான நன்னடத்தைகளுக்கும் அழகிய சாட்சியங்களாக சரித்திரத்தை அலங்கரிக்கின்றன.

உலகில் தோன்றிய அத்தனைத் தலைவர்களும் மதவாதிகளும் தங்களைப் பின்பற்றியவர்களை ‘தொண்டர்கள்’ என்றும் ‘சீடர்கள்’ என்றும் பெயரிட்டு அழைத்தபோது, மானமிகு தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே அவர்களுக்குச் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, சமத்துவம் வழங்கி சகோதர வாஞ்சையுடன் ‘தோழர்கள்’ என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் நம்மில் கிடையாது என்று ‘தோழமையுடன்’ முழங்கினார்கள். இன்றைய கம்யூனிஸ்டுகள் “தோழரே” என்ற, பேச்சுக்கு மட்டும் பிரயோகிக்கும் அந்த வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி தன்மான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்து, அதை நடைமுறையில் அமுலாக்கம் செய்தவர் இறைவனின் தூதாய் வந்த நம் இனிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘தாம்!

எனது சகோதரர் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, எங்களின் தந்தை அலீய் இப்னு அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நானிலம் போற்றிடும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம் தோழர்களுடன் நடந்துகொள்ளும் முறை யாது? என்று வினவியபோது, அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் புன்சிரிப்போடும் நற்குணத்தோடும் எளிமையான சுபாவத்தோடும் இருப்பார்கள். கடுகடுத்தவர்களாகவோ இறுகிய மனம் படைத்தவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. கூச்சலிடுதல், கெட்ட செயல் புரிதல், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவர்களை வரம்புமீறிப் புகழ்தல், மனம் நோகும்படி கிண்டல் செய்தல், கஞ்சத்தனம் போன்ற எந்த வித இழிவான குணங்களும் அவர்களிடம் இருந்ததே இல்லை. அவர்களுக்கு விருப்பமில்லாத பேச்சுக்களை பிறர் பேசும்போது அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை மற்றரொருவர் பெற விரும்பினால், அதை அவர் பெறுவதைவிட்டும் நிராசை அடைந்துவிட மாட்டார். அதைத் தருவதாக வாய்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீணான வாக்களிக்கவும் மாட்டார்கள். சண்டையிடுதல், பெருமையடித்தல், வீண் பேச்சுப் பேசுதல் இவற்றை விட்டும் தம்மைத் தடுத்துக் கொள்வார்கள். அதைப் போன்று இத்தீய குணங்களை விட்டுப் பிறரையும் நீங்கிக்கொள்ளச் செய்வார்கள். யாரையும் இழிவாகப் பேசமாட்டார்கள். பிறரைப் பற்றிப் புறம்பேச மாட்டார்கள். அடுத்தவர்களின் குறைகளைத் தேடித் திரியமாட்டார்கள். நன்மை தரும் விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார்கள்!

பேரன்பாளர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால், அவர்களின் தோழர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாமல் அசையாமல் அமைதியாய்க் கவனிப்பார்கள். சுவர்க்கத்தின் சொல்லழகர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்றைச் சொல்லி முடித்து அமைதியான பின்பே தங்களுக்குள் மெதுவாகப் பேசத் துவங்குவர்! சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் தோழர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டார்கள்!

மடமை நீக்கிய மாண்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் யாரும் பேசத் தொடங்கினால், இனிய நபியவர்கள் இடையே குறுக்கிடாமல், அவர் முடிக்கும் வரை அங்கே அமைதி காப்பார்கள். முந்தியவர் பேசியதைத் தொடர்ந்து அடுத்தவர் பேசினாலும் அதையும் அமைதியுடன் கவனித்துக் கேட்பார்கள். உரையாடல்களுக்கிடையே தோழர்கள் சிரிப்பை வெளிப் படுத்தினால், நகைச்சுவையை ரசிக்கும் நம் நபிமணியும் சேர்ந்து சிரிப்பார்கள். அவர்கள் ஆச்சர்யப்பட்டால், அவர்களுடன் சேர்ந்து வேந்தர் நபியும் தம் வியப்பை வெளிப்படுத்துவார்கள்!

முற்றிலும் அந்நியர்கள் வந்து அவர்கள் சபையில் பேசும் கடுகடுப்பான வார்த்தைகளையும் இங்கிதமில்லாத கேள்விகளையும் பொறுத்துக் கொள்வார்கள். சமயங்களில் இத்தகைய இங்கிதமற்றவர்களைக்கூட நபித்தோழர்கள் கூட்டிவந்து விடுவார்கள். அப்போதும்கூடப் பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.

தேவை வேண்டி நிற்பவர்களைக் கண்டால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும்படிக் கூறுவார்கள். எவரும் தம்மை நன்றி தெரிவிக்கும் வகையில் அல்லாமல் அவர்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து முகஸ்துதி செய்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வரம்பு மீறி யாரும் பேசினால் அதைத் தடுப்பார்கள் அல்லது எழுந்துவிடுவார்கள்’ என்று ஒரு சித்திரம் வடித்ததைப் போல் நம் முத்திரைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அண்ணலின் இதயக் கனியாகிய அன்புப் பேரன் அழகின் அரசன் ஹஸன் இப்னு அலீய் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உரைத்தார்கள். (அறிவிப்பாளர்: ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஷமாயில் திர்மிதீ 350)

அந்த அன்பும் மென்மையும் கனிவும் கண்ணியமும் ஊக்கமும் உத்வேகமும் பொறுமையும் நிலை குலையாத உறுதியும் வலிமையும் எளிமையும் அல்லாஹ்வின் அருள்மீது அளவு கடந்த நம்பிக்கையும் கொண்ட அபூர்வமான அந்த மாமனிதரைத் தவிர வேறு எந்த மனிதர் மீதும் அந்த மேகம் இதுவரைக்கும் இறங்கிவந்து நிழலிட்டதில்லை! இந்த பூமியும் அவர் ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் இதுவரைத் தன் வழிமீது விழிகளைத் திறந்து விரிப்பாக்கி வைக்கவுமில்லை! அத்தனை கோடி மனிதர்களில் இருந்தெல்லாம் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமனிதர்! கருணையின் திறவுகோல்! சுவனத்தின் வழிகாட்டி! சத்தியத்தின் சான்று! அல்லாஹ்வின் மகிழ்வு! நம் ஆனந்தப் பெருவாழ்வின் ஆதார சுருதி! தரணி எல்லாம் போற்றிடும் நம் தங்கத் தலைவர்! இந்த உடம்பிலே ஒட்டி இருக்கும் உயிரென்ன? இந்த உயிரைவிட உயர்வான வேறு ஏதாவது ஒன்று இருக்குமாயின் அதையும்விட நமக்கு மேலானவர்!

நிலவு போன்ற வண்ண முகமும், மென்மை தவழும் மென்னகைச் சிரிப்பும், அகலமான விரிந்த நெற்றியும், இரவின் இருளிலும் பிரகாசிக்கும் சௌந்தர்யமும், தலையின் மீது கறுப்புத் தலைப்பாகையும், காதுமடல் வரைத் தொங்கும் சுருட்டை முடியும், கண்களா அவை காந்தங்களா என வியக்க வைக்கும் ஈர்ப்பு விழிகளும், அன்பில் இழைத்த மென்மைக் கன்னங்களும், கருவில்லைப் போல் நீண்ட இமைகளும், புன்னகை வாசம் பொழுதெல்லாம் வீசும் இதழ்களும், நிலையாய் நிறைந்திருந்த அந்தக் கருணையின் வடிவமானவரை இப்போதே காணக் கண்கள் தேடுகின்றன!

அது சாத்தியமில்லை! எனினும், ‘அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரி’ நம் கண்முன்னே அற்புத வரலாறாக அவர்களின் ஒவ்வொரு அசைவுகளோடும் உயிரோடு நிற்கிறது! நபிமொழி ஒவ்வொன்றையும் நம் மனத்தினில் ஆழமாகப் பதித்துக் கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தி வாழத் துவங்கி விட்டால், அந்தப் பன்முகத் திறன் கொண்ட பண்பாளர் நடந்து காட்டிய வழித் தடங்களின் சுவடுகளை நோக்கி நாம் நடக்கத் துவங்கிவிட்டால், நிச்சயமாக, மறுமையில் அந்த மாண்பாளர் நபியின் தோழமையை மகிழ்ச்சியோடு நாம் பெறலாம்!

“நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவர்களுக்கு, நாம் இவ்வேத நூலை உரிமைப் படுத்துகின்றோம்” (அல்குர்ஆன் 35:32)

என்ற தன் அன்பு நேசராகிய அண்ணலாருக்கு அளவு கடந்த அருளாளன் அல்லாஹ் ஜல்லஜலாலஹு மேற்காணும் அருள்மறை வசனத்தை அருளியபோது,

“இந்த அகிலத்தின் முத்துக்களாகிய மக்களே, நற்செய்தி பெறுங்கள்! நீங்கள்தாம் இந்த ஒட்டுமொத்த உலகத்தின் உன்னதப் பிரஜைகள்! முதன்முதலில் சுவர்க்கம் புகும் கூட்டத்தினர் நீங்களாகவே இருப்பீர்கள்! ‘ஓரிறைவன்’ என்ற தத்துவத்தில் உறுதியாய் நில்லுங்கள். திருக்குர்ஆனை உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்க் கொள்ளுங்கள். என் வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வழுவாது பின்பற்றுங்கள். இன்ஷா அல்லாஹ், சுலபமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்” என்றார்கள் அமைதி நயமெங்கும் அழகுபடப் பொங்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மேலும் ‘எனக்குப் பிறகு நீங்கள் துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவிக்க நேரலாம். உங்களைவிட உவப்பானவர்களாக மற்றவர்கள் கருதப்படலாம். எனினும், என்னைச் சுவர்க்கத்தின் நீரோடை அருகே சந்திக்கும்வரை பொறுமை காத்திடுங்கள்’ என்றார்கள்.

சுவர்க்கத்தின் நீரோடை (அல்கவ்ஸர்):

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுடன் இருந்தபோது, திடீரென உறங்கிவிட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் சிரித்தவர்களாக, தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், “யா ரசூலல்லாஹ்! தாங்கள் சிரிப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டோம்.

அதற்கவர்கள், ‘சற்றுமுன் எனக்கு அத்தியாயம் ஒன்று அருளப்பட்டது’ என்று தொடர்ந்து எங்களுக்கு அதை ஓதிக் காட்டினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

(நபியே, நிச்சயமாக, உமக்கு ‘அல்கவ்ஸரை’ வழங்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது பலிப் பிராணியும் அறுத்து ‘குர்பானி’ கொடுப்பீராக! நிச்சயமாக, உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்!) (அல்குர்ஆன் 108:1)

பின்னர், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்கவ்ஸர்’ என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்’ என்று பதிலளித்தோம்.

‘அது சுவனத்தின் ஒரு நீரோடையாகும்! என் இறைவன் மறுமை நாளில் அதைத் தருவதாக எனக்கு வாக்களித்துள்ளான்! அதன் மகிழ்ச்சியினால்தான் நான் சிரித்தேன். அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர்த் தடாகம்! மறுமை நாளில் எனது உம்மத்தினர் தண்ணீர் அருந்துவதற்காக, அதை நோக்கி வருவர். அதன் குவளைகள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்றவை!

அப்போது அவர்களில் ஓர் அடியார் நீர் அருந்த விடாமல் தடுக்கப்படுவார். உடனே நான், ‘யா அல்லாஹ்! அவர் என் உம்மத்துகளில் ஒருவரல்லவா?’ என்பேன். அதற்கு, அனைத்தும் அறிந்தவனாகிய அல்லாஹ் ஜல்லஜலாலஹு, ‘உமது சமுதாயம் உமக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கி விட்டதை எல்லாம் நீர் அறிய மாட்டீர்!’ என்று கூறுவான். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபுதாவுத் 4747)

அடக்கி ஆளும் அரசாங்கத்தின் அதிபதியாகிய வல்லமை நிறைந்த அல்லாஹ் ஜல்லஜலாலஹுவின் வரவை எதிர் நோக்கி எல்லோரும் நிற்பது மட்டும் ஐந்நூறு ஆண்டுகள் போலான அந்த மகத்தான நீதித் திருநாளின் நெருக்கடியில்! பெரும்பெரும் நபிமார்களும் இறைநேசர்களும் தங்களின் முடிவு என்னவாகுமோ என்று தவித்துக்கொண்டும் அந்தப் பெரும் அமளி துமளிகளில் அங்குமிங்கும் தத்தளித்துத் தடுமாறியும் திரியும் சூழ்நிலையில்! ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாக்களைப் பற்றியே பரிதவித்து நிற்கும் வேளையில்,

ஒரே ‘ஓர் ஒளிபொருந்திய மனிதர்’ மட்டும் ‘தம் சமுதாய மக்களை’ப் பற்றிய கழிவிரக்கத்துடன் கவலைப்பட்டுக் காத்து நிற்கும் காட்சியை, அந்த அறிவெனும் சுடர்த் தாரகையை, அமைதியின் தனி ஜோதியை அங்கே நாம் காணலாம்!

பிரம்மாண்டமான அத்தனை மனிதக் கூட்டங்களுக்கும் மத்தியில், தொழுகைக்கு முன்னர் ‘உலூ’ எனும் அங்க சுத்தி செய்துகொண்ட காரணத்தால், தனியாக ஒளி வீசும் முகங்களை வைத்தே தம் உம்மத்துகளில் ஒவ்வொரு முஸ்லிமையும் சேயைக் கண்ட தாயைப் போல அடையாளம் கண்டு அழைக்கும் பேரன்பின் பிறப்பிடமாய்ப் பிறந்து வந்த எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே நிற்பதைப் பார்க்கலாம்!

தாகத்தில் தவித்துத் தன் தலைவனை நோக்கி ஓடிவரும் தம் உம்மத்தின் ஒவ்வொரு முஃமினையும் ஒரு தாய் போல அழைத்து, தாகம் தணித்து, ஆறுதல் அளித்து, அவனுக்கு மன்னிப்பும் வழங்குமாறு மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டு, நல்லவர்களின் நந்தவனத்திற்குப் பரிந்துரையும் செய்யும் பண்பாளர் எங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், விண்மீன்களுக்கு இடையே ஒரு வெண்ணிலவைப் போல அங்கே சுடர்விட்டுத் தெரிவதை நாம் காணலாம்!

ஆம்! அது ஓர் உன்னதமான சந்திப்பு…பொங்கிப் பிரவாகம் எடுத்து வரும் தடாகத்தின் நீர்க்கரையில்..பாலை விட வெண்மையான பளிங்கு வண்ண நிறத்தில் ஓடிவரும்… தேனைவிட இனிமையான தெள்ளிய நீர்ச்சுவையில்… நட்சத்திரங்கள் போன்று மின்னும் தண்ணீர்க் குவளைகள் அருகில்… அந்த சலசலத்து ஓடும் அமுத நதிக்கரையில்… கஸ்தூரியைவிட நறுமணம் வீசிவரும் வசீகர வேளையில்…. அதே மாறாத இனிய மென் புன்னகையுடன் நமக்காகவே காத்திருக்கும் மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மங்காப் புகழ்பெற்ற நம் தங்கத் தலைவரின் பரந்து விரிந்து நிற்கும் நேசச் சிறகின் நிழலினில்ஸ அவர்களை அன்புடன் நேசிக்கும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்…. இன்ஷா அல்லாஹ்!

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ

பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘வஸீலா’ என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு ‘புகழுக்குரிய இடத்தில்’ அவர்களை எழுப்புவாயாக!

(இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு, மறுமை நாளில் அந்த மனிதருள் புனிதர், மாமனிதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிந்துரை கிடைத்து விடுகின்றது). (அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 614)

-இக்பால் M. ஸாலிஹ்

ஓ கஃபாவே !!!

6543உனக்குத்தான் எத்தனை சிறப்பு. உலகின் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையின்போது உன்னை நோக்கியே தொழுகின்றனர். நிற இன பேதமின்றி ஏழை பணக்காரன் பேதமின்றி உன்னை நோக்கி வருகின்றனர்.

நீ வல்ல இறைவனால் அபய பூமி என்றும் அறிவிக்கப்பட்டாய்.அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் நீ இன்றளவும் அபயபூமியாகவே இருக்கிறாய். 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் நீ இருந்து வருகிறாய்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ”ஹஸ்வா” என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக நீ அமைந்திருக்கும் மக்காவை நோக்கி, ”நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)” என்று கூறினார்கள்.

-அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) (திர்மிதீ 3860).

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், உன் சிறப்பை உறுதிபடுத்துகின்றன.

மேலும் அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து உன்னை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான்.

இங்கு என்னால் ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. உனக்கு ஏன் இத்தனை சிறப்பு. படைத்த இறைவனே உன்னை நேரடியாக பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன ?

உண்மையை சொல்வதென்றால் நீ கற்களால் கட்டப்பட்ட ஒரு சாதாரண கட்டிடம். எந்த ஒரு பொறியாளருடைய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படாத ஒரு சதுர வடிவிலான கட்டிடம். இன்னும் உன்னைச்சுற்றி பலநூறு மாடிகள் கொண்ட அழகான கட்டிடங்கள் இருக்க உனக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு ?

உலக மக்கள் அனைவரும் உன்னை நோக்கி தொழுவதினாலா ? அனைத்து மக்களை நீ அரவணைத்துக்கொள்வதினாலா ? நீ அபயமளிக்கப்பட்ட பூமி என்பதினாலா ? நிச்சயம் இவை மட்டுமே உன் சிறப்புக்கு காரணமாக இருக்கவே முடியாது..

இந்த கேள்விக்கு விடைதேடி நான் பல்லாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு வரலாற்று பயணம் மேற்கொள்கிறேன்.

இப்பொழுது நீ இருக்கும் அதே இடம் ஆனால் அது யாருமில்லா பாலைவனம். மனிதர்கள் வாழ தகுதியற்ற பாலைவனம். ஆதம் (அலை) அவர்கள் காலத்திலேயே நீ கட்டப்பட்டுவிட்டாய் என்றபோதினும் உனக்கு இப்பொழுது இருக்கும் சிறப்பு அப்பொழுது இல்லை. ஒருவர் தன் மனைவி மற்றும் பிறந்து சிறிது நாட்களேயான தன் குழந்தையுடன் நீ இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார். பல ஆண்டு குழந்தை பாக்கியமில்லாமல் இறைவனிடம் வேண்டி பெற்ற குழந்தை அது.

இறைவனிடத்தில் இருந்து செய்தி இல்லை கட்டளை. உன் மனைவியையும் குழந்தையையும் யாருமே வாழாத வாழமுடியாத இந்த பாலைவனத்தில் விட்டுச் செல். எந்த ஆண் மகனுக்கும் செய்ய இயலாத ஒரு செயல். ஆனால் வேறு வழியில்லை இறைவனின் கட்டளை ஆயிற்றே. அவர் அவ்வாறே செய்கிறார்.பின் இறைவனிடம் பின்வருமாறு துஆ செய்கிறார்.

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.

-அல்குர்ஆன் (14 : 37)

இறைவனின் கட்டளை என்பதால் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மனைவி ஹாஜிரா (அலை) இதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக்கொள்கிறார். யாருமே வாழமுடியாத இடமாக இருந்தால் என்ன, பாதுகாப்பளிப்பது இறைவன் அல்லவா. ஆனால் அவ்வளவு எளிது அல்லவே பாலைவனத்தில் வாழ்வது. தன் சிறு குழந்தைக்கு தண்ணீர் தாகம், அழ ஆரம்பித்துவிட்டது. பெற்ற தாய் துடியாய் துடிக்கிறார். இந்த பாலைவனத்தில் நான் தண்ணீருக்கு எங்கே செல்வேன். அதோ தென்படுகிறது தண்ணீர் ஓடுகிறார் அது காணல் நீர் என்பதை அறியாமல். ஸஃபா என்னும் குன்றிலிருந்து மர்வா என்னும் குன்றுவரை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஏழுமுறை.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உதவி புரிந்தான்.

ஆம் அல்லாஹ்வின் உதவி ஹாஜிரா (அலை) அவர்களுக்கு கிடைத்தேவிட்டது. பாறைகள் நிறைந்த தண்ணீருக்கு வழியே இல்லாத பாலைவனத்தில் நீரூற்றை ஓடச் செய்தான் வல்ல இறைவன். ஜம்ஜம் என்னும் இந்த நீரூற்று மக்கள் குடியேறும் இடமாக சிறிது சிறிதாக மாற உதவி புரிந்தது.

ஆனால் சோதனை மட்டும் முடிந்தபாடில்லை. இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் இறைவனிடமிருந்து சோதனை,தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை இறைவனுக்காக நரபலி கொடுக்குமாறு கட்டளை. அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஷைத்தான் எவ்வளவோ இதை தடுக்க முயற்ச்சி எடுத்தும் பயனில்லை. கல்லால் அடிவாங்கியது மட்டுமே மிச்சம்.

வானவரின் தூதர் ஜிப்ரையில் (அலை) அவர்களை அனுப்பி இப்ராஹீம் (அலை) மகனை பலியிடுவதை தடுத்தான் இறைவன். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். எம்முடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். இப்ராஹீம் (அலை) மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தினார்.அச்சமயம் நாம் “இப்ராஹீமே!” என அழைத்து, உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, “நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்).ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.

-(அல்குர்ஆன் 37:103,104,105,106,107)

மேலும் வல்ல இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களை பாராட்டி மக்களின் இமாமாகவும் (தலைவராகவும்) ஆக்கினான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் சேர்ந்து கஃபாவாகிய உன் அடித்தளத்தை உயர்த்தி

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”

“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”

என இறைவனிடம் துஆ மூலம் வேண்டினார்கள்.வேண்டுகோள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டது.

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் – அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”

-(அல்குர்ஆன் 2:125,126)

இதை பின்வரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வார்த்தை மேலும் உறுதி படுத்துகின்றன.

“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை”

காலங்கள் உருண்டோடின உன்னை ஓர் இறை கொள்கைக்காக கட்டிய இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்திருந்தால் துடித்து போயிருப்பார். ஆம் ஓர் இறை வழிபாட்டிற்காக கட்டப்பட்ட உன்னுள் பல சிலைகள் கடவுள் என்னும் பெயரால். கொடுமையிலும் கொடுமை யாதெனில் உன்னை வல்ல இறைவனுக்காக கட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களும் கடவுளின் சிலையாய் மற்ற சிலைகளுடன் நின்றுகொண்டிருந்தார்.

சத்தியத்தை எடுத்துச்சொல்ல ஓர் இறை கொள்கையை நிலைநாட்ட உனது மக்கமா நகரிலேயே உதித்தார் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். உண்மையை உறக்க சொன்னதற்காக ஊரைவிட்டே விரட்டப்பட்டார்.சோர்ந்துவிடவில்லை பெரும்படையுடன் நீ இருக்கும் மக்கா நகரை வெற்றியும் கண்டார். உன்னிடத்திலே இருந்த அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்தினார்.நீ எதற்காக கட்டப்பட்டாயோ அதனை நிறைவேற்றினார்.

ஆனாலும் அதுவரை முஸ்லிம்கள் உன்னைவிடுத்து பைத்துல் முகத்தஸையே கிப்லாவாக முன்னோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஆனால் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கோ உன்னை கிப்லாவின் திசையாக நோக்கி இறைவனை வணங்க ஆசை.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசையல்லவா, நிறைவேறாமல் இருக்குமா?

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

-(அல்குர்ஆன் 2:144)

ஆக இந்த மாபெரும் வரலாற்று பயணத்தின் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகம் மற்றும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசையுமே கஃபாவாகிய உன் சிறப்புக்கு காரணம் என்பதை அறிந்துகொண்டேன்.

“வரலாறு தெரியாத சமுதாயம் நிலைக்காது” என்று சொல்லுவார்கள். இவ்வுலகில நீ இருக்கும்வரை உன்னை நோக்கி மக்கள் வருவது நிற்கும்வரை இஸ்லாமிய வரலாறு அழியாது இஸ்லாமும் அழியாது என்பதை நிச்சயம் நான் அறிவேன்.

உன்னைப்போல சிறப்பு பெறவேண்டும் என எனக்குள்ளும் ஓர் ஆசை. ஆனால் என்னால் நிச்சயம் இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தது போலெல்லாம் இறைவனுக்காக தியாகம் செய்திடமுடியாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வை நேசித்தார்கள். நானோ சுவர்க்கம் வேண்டும் என்பதற்காகவும் நரகம் வேண்டாம் என்பதற்காகவும் அல்லாஹ்வை நேசிக்கின்றேன்.

ஆகையால் ஹாஜிரா (அலை) அவர்கள் தன்னந்தனியாக பாலைவனத்திலே ஓடியது போல அதே இடத்தில் குளிர்சாதன வசதியுடன் மக்களுடன் மக்களாக கையில் தண்ணீரையும் ஏந்திக்கொண்டு ஹாஜிரா (அலை) ஓடியது போல ஓடி நடிக்கிறேன். இறைவனுக்காக என் பிள்ளையை பழிகொடுக்க மாட்டேன் என தெரிந்தும். யா அல்லாஹ் நீ ஆட்டை குர்பானி கொடுக்க சொன்னாய். இல்லையெனில் நான் என் மகனை உனக்கு குர்பானி கொடுத்திருப்பேன் என்பதாக நடித்து ஆட்டை பழியிடுகிறேன்.மேலும் அதிகம் அதிகம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுகின்றேன்.

இப்படியெல்லாம் செய்தாலாவது வல்ல இறைவன் என் துஆவை ஏற்றுக்கொள்ள மாட்டானா என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த பாவியாகிய நானும் சுவனம் செல்லவேண்டும் என ஆசை கொண்டுவிடமாட்டார்களா என்றும் கனா காண்கின்றேன்.

-முஹம்மது சிராஜுத்தீன்